sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

/

வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்


ADDED : ஆக 12, 2024 12:30 AM

Google News

ADDED : ஆக 12, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.

பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. அடுத்த சில நாட்களில் வினாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 550 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 8:45 மணிக்கு பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மதுரையில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் இங்கு நீர் நிறுத்தப்பட்டு உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று காலை அணை நீர்மட்டம் 57.78 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1328 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம்போல் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us