ADDED : ஜூன் 27, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார்.
துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசீலா, சரண்யா, கிருஷ்ணவேணி, உமாகாந்தி பேசினர். கல்லுாரி முன்னாள் மாணவிகள் குமாரி தேவிதா, பூஜா பேசினர். துணை முதல்வர் கோமதி நன்றி கூறினார். முதலாமாண்டு மாணவிகளின் பெற்றோர் பங்கேற்றனர்.