sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதியில் ரோடு எப்போது அமையும்

/

கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதியில் ரோடு எப்போது அமையும்

கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதியில் ரோடு எப்போது அமையும்

கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதியில் ரோடு எப்போது அமையும்


ADDED : செப் 05, 2024 04:57 AM

Google News

ADDED : செப் 05, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : தமிழக----கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைப்பது எப்போது என தமிழக பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப் பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளாவின் அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிக துாரம் நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில் கட்டுப்பாடு முழுவதையும் தங்களது வசம் கொண்டு வருவதற்கான திட்டத்தை கேரளா செயல்படுத்தி வருகிறது.

சர்வே பணி


கோயிலின் முகப்பு வாயில் தேனி மாவட்டத்தை நோக்கிய அமைந்துள்ளது. 1817 ல் பழமையான கிழக்கு இந்திய கம்பெனி சர்வேயும்,1893, 1896 ல் நடத்திய சர்வேயிலும், 1913, 1915ல் வெளியிட்ட எல்லைக்காட்டும் வரைபடங்களிலும் கோயில் தமிழக வனப்பகுதியிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1976 ல் தமிழ்நாடு, கேரள அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கோயில் 40 அடி தூரம் தள்ளி தமிழக வனப் பகுதியில் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் பின்பு கேரள வனப்பகுதியில் அவசர அவசரமாக வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்ட பின்னர் கேரளாவின் கெடுபிடி துவங்கியது.

ரோடுதான் தீர்வு


தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படுகிறது. அந்த நேரத்திலும் கேரள வனப்பகுதி வழியாக பக்தர்கள் அதிகம் செல்வதால் கேரள வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்து பக்தர்களை புண்படுத்தி வருகிறது. தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து வாகனங்கள் செல்வதற்கான ரோடு அமைப்பதே தீர்வு என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பக்தர்கள் கூறுகையில் தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் ரோடு இருந்துள்ளது.

காலப்போக்கில் அவை சீரமைக்காமல் இருந்ததால் நடைபாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோயில் வரை ரோடு அமைக்க தமிழக அரசால் சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்பணி முடக்கப்பட்டது. சமீபத்திலும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடந்தன.

ரோடு அமைக்க பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., துாரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., தூரமும் உள்ளது. இதில் ரோடு அமைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். இப்பணி நடந்தால் தமிழக பக்தர்கள் கேரளாவின் எவ்வித கெடுபிடிகளும் இன்றி மாதந்தோறும் கண்ணகி அம்மனை வழிபட வாய்ப்பு ஏற்படும்.






      Dinamalar
      Follow us