ADDED : செப் 04, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே டி.சேடப்பட்டி சேர்ந்தவர் பாலமுருகன் 47, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்த இவருக்கு மனைவி,இரு மகன்கள் உள்ளனர். மனைவி விஜயலட்சுமி தையல் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2024 பிப்., 5ல் ஆட்டோ ஓட்ட சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடியும், உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி விஜயலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.