/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐம்பது மாணவர்களுக்கான வசதியில் 185 பேர் தங்குவதால்... நெருக்கடி; பூமி பூஜையுடன் முடங்கிய உறைவிட பள்ளி
/
ஐம்பது மாணவர்களுக்கான வசதியில் 185 பேர் தங்குவதால்... நெருக்கடி; பூமி பூஜையுடன் முடங்கிய உறைவிட பள்ளி
ஐம்பது மாணவர்களுக்கான வசதியில் 185 பேர் தங்குவதால்... நெருக்கடி; பூமி பூஜையுடன் முடங்கிய உறைவிட பள்ளி
ஐம்பது மாணவர்களுக்கான வசதியில் 185 பேர் தங்குவதால்... நெருக்கடி; பூமி பூஜையுடன் முடங்கிய உறைவிட பள்ளி
ADDED : ஏப் 28, 2024 04:14 AM
இத்துறையின் கீழ் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 213 தொடக்க பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 22 உயர்நிலைப் பள்ளிகள், 38 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. அரசின் கொள்கை முடிவின்படி, செக்கானூரணி, வெள்ளையம்மாள்புரத்தில் 2 உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி வழங்கியது.
அதன் பேரில் பூமிபூஜைகள் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளையம்மாள்புரத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டினார். கடந்த 2 ஆண்டுகளாக ஆறாம் வகுப்பிற்கு அட்மிஷன் போடப்படுகிறது. 160 மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏழாம் வகுப்பிற்கு வந்து விட்டனர். தற்போது 135 பேர் படித்து வருகின்றனர். ஏற்கெனவே உள்ள மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகளை உண்டு உறைவிட பள்ளி தற்காலிகமாக செயல்பட எடுத்து கொண்டனர். போதிய ஆசிரியர் பணியிடங்களும் நியமிக்கப் படவில்லை.
ஏற்கெனவே இயங்கி வரும் விடுதியில் தற்போது உண்டு உறைவிட பள்ளியில் படிப்பவர்களும் தங்கி உள்ளனர். 50 பேர்கள் மட்டுமே தங்க கூடிய அந்த விடுதியில், 135 பேர்களையும் சேர்த்து 185 மாணவர்கள் தங்கி உள்ளனர். இதனால் விடுதியிலும் உச்சபட்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வகுப்பறைகளையும் எடுத்து கொண்டதால், ஏற்கெனவே படிக்கும் மாணவர்கள் மரத்தடியில் படிக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.
உண்டு உறைவிட பள்ளிக்கான நிதியை உடனே ஒதுக்கீடு செய்து, நெருக்கடியை தவிர்க்க, கள்ளர் சீரமைப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

