sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் வன விலங்குகள் மூணாறில் தொழிலாளர்கள் அச்சம்

/

குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் வன விலங்குகள் மூணாறில் தொழிலாளர்கள் அச்சம்

குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் வன விலங்குகள் மூணாறில் தொழிலாளர்கள் அச்சம்

குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் வன விலங்குகள் மூணாறில் தொழிலாளர்கள் அச்சம்


ADDED : ஆக 16, 2024 04:58 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடு, யானை ஆகியவை வலம் வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் கடந்த காலங்களை விட சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலி, சிறுத்தை, காட்டு மாடு, யானை அதிகமாக நடமாடுகின்றன. அவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்டு மாடு, யானை ஆகியவை குடியிருப்பு பகுதியில் வலம் வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக குண்டளை, செண்டுவாரை, சிட்டி வாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் வலம் வருகிறது. சிட்டிவாரை எஸ்டேட் சவுத் டிவிஷனில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த படையப்பா தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகில் இருந்த வாழைகளை தின்றது.

காட்டு யானைகளை போன்று காட்டு மாடுகளும் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் ஐ.டி.டி.யில் குடியிருப்பு பகுதியில் பட்ட பகலில் காட்டு மாடு நடமாடியது. அதனை பார்த்து வீட்டிற்குள் ஓடி பெண்கள் உள்பட பலர் உயிர் தப்பினர்.






      Dinamalar
      Follow us