sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளாவில் வேலை நேர மாற்றம் மலை பகுதிகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் தகவல்

/

கேரளாவில் வேலை நேர மாற்றம் மலை பகுதிகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் தகவல்

கேரளாவில் வேலை நேர மாற்றம் மலை பகுதிகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் தகவல்

கேரளாவில் வேலை நேர மாற்றம் மலை பகுதிகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் தகவல்


ADDED : மே 07, 2024 05:50 AM

Google News

ADDED : மே 07, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: 'மாநிலத்தில் வேலை நேரத்தில் ஏற்படுத்திய மாற்றம் மலையோரப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.' என, தொழிலாளர் நலத்துறை ஆணையர் அர்ஜூன்பாண்டியன் தெரிவித்தார்.

கேரளாவில் வெப்பம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் வேலை நேரத்தில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

அதன் படி சுட்டெரிக்கும் வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் மே 15 வரை பகல் 12:00 மணி முதல் 3:00 மணி வரை பணியை தவிர்க்குமாறும் அதனை மீறி பணியில் ஈடுபடுத்தும் நிறுவனம், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் கூறப்பட்டது.

இந்த நிபந்தனை கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேலை நேரத்தில் செய்த மாற்றம் மலையோரப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தொழிலாளர் நலத்துறை ஆணையர் அர்ஜூன்பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 'மலையோரப் பகுதிகளில் பகல் 12.00 முதல் 3.00 மணி வரை தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்வதாக கண்டறியப்பட்டால், தோட்ட நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனை கண்காணிப்பதற்கு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி, உதவி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் நாட்களில் கட்டுமானம், ரோடு பணி, தோட்ட பகுதிகள் ஆகியவற்றில் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us