ADDED : பிப் 27, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி; பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஏ.புதூர் நடுத்தெரு மலைராஜா 22. இவரது தந்தை மலைச்சாமி 52. வாழை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். மலைச்சாமிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மலைராஜா தோட்டத்திற்கு செல்லும் போது, பாம்பு கடித்தது.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மலைராஜா அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-