sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேர் தரிசனம்; மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்

/

 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேர் தரிசனம்; மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்

 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேர் தரிசனம்; மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்

 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேர் தரிசனம்; மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்


ADDED : ஜன 01, 2026 06:14 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு தொடங்கியது.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் ஜன.14ல் நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 256 பக்தர்கள் சன்னிதானம் வந்தனர். 30-ம் தேதி 57 ஆயிரத்து 256 பேர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 5:00 மணி வரை 63 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு தொடங்கியது. 3:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடத்திய பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.நேற்று மதியம் மகர விளக்குகால முதல் களபாபிஷேகம் நடந்தது.

மகர விளக்கு காலத்தில் முதற்கட்ட பாதுகாப்பு பணிகளுக்காக 10 டி.எஸ்.பி., 35 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ., ஏட்டு உட்பட 1593 போலீசார் சன்னிதானத்தி ல் பொறுப்பேற்றுள்ளனர். தனி அதிகாரியாக எஸ்.பி., எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜன.14ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும் மகர நட்சத்திரமும் தெரியும். புல்மேடு சம்பவம் எதிரொலியாக மகர ஜோதி நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். அன்றைய தினத்தில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us