sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மது குடித்து இயக்கிய 13 ஆட்டோக்கள் பறிமுதல்

/

மது குடித்து இயக்கிய 13 ஆட்டோக்கள் பறிமுதல்

மது குடித்து இயக்கிய 13 ஆட்டோக்கள் பறிமுதல்

மது குடித்து இயக்கிய 13 ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : மார் 07, 2024 06:15 AM

Google News

ADDED : மார் 07, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி பழனிசெட்டிபட்டியில் முறையான ஆவணங்கள் இன்றியும், மது போதையில் ஆட்டோக்களை இயங்கிய 13 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தேனி எஸ்.பி., சிவபிரசாத் முறையான ஆவணங்கள் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதன்படி பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் பாலசுப்பிரமணியன், மணிமாறன், பயிற்சி எஸ்.ஐ., அஜய்சர்மா தலைமையிலான போலீசார், பூதிப்புரம் ரோட்டில் உள்ள தனியார் தியேட்டர் முன் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 ஆட்டோக்களின் டிரைவர்கள் மது குடித்து ஆட்டோ ஓட்டியது தெரியவந்தது. மேலும், 10 ஆட்டோக்களில் முறையான ஆவணங்கள் இல்லை.

அதில் ஒரு ஆட்டோ மதுரையில் இருந்து தேனி வரை எவ்வித ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கூறுகையில், 'விதிமீறலில் ஈடுபட்ட 13 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம்', என்றார்.






      Dinamalar
      Follow us