sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அறிவிப்பாக உள்ள ரூ.130 கோடி வாழை சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்க வலியுறுத்தல்

/

அறிவிப்பாக உள்ள ரூ.130 கோடி வாழை சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்க வலியுறுத்தல்

அறிவிப்பாக உள்ள ரூ.130 கோடி வாழை சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்க வலியுறுத்தல்

அறிவிப்பாக உள்ள ரூ.130 கோடி வாழை சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்க வலியுறுத்தல்


ADDED : ஜன 06, 2024 06:52 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மாவட்டத்தில் ரூ.130 கோடி வாழை சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வாழை 22 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செவ்வாழை, நேந்திரன், நாழிப் பூவன், ஜி 9 உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் வாழை விவசாயிகளுக்கு தீராத பிரச்னையாக வெடி வாழை, காற்று காலங்களில் வாழை சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. வாழை விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், மார்க்கெட்டிங் வசதி, குளிர்பதன கிட்டங்கி வசதி, ஆராய்ச்சி நிலையம் என எதுவும் இல்லை.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய ரூ.130 கோடியில் வாழை தொகுப்பு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் தொடர் நடவடிக்கை இல்லை. அறிவிப்புடன் திட்டம் நின்றுள்ளது. அரசாணை வெளியிட்டாலும், நிதி ஒதுக்கீடுகள் விடுவிக்கப்படவில்லை. எனவே வாழை சிறப்பு திட்டம் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடியை நீடித்து இருக்கும்படி செய்ய வாழை ஊக்குவிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆராய்ச்சி நிலையம் துவக்கி, வாழை விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us