sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கார், வேன் மோதிய விபத்தில் 2 தெலங்கானா பக்தர்கள் பலி

/

கார், வேன் மோதிய விபத்தில் 2 தெலங்கானா பக்தர்கள் பலி

கார், வேன் மோதிய விபத்தில் 2 தெலங்கானா பக்தர்கள் பலி

கார், வேன் மோதிய விபத்தில் 2 தெலங்கானா பக்தர்கள் பலி


ADDED : டிச 19, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கார் மீது லோடு வேன் மோதிய விபத்தில் தெலங்கானா ஐயப்ப பக்தர்கள் இருவர் பலியாகினர்.

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், பத்துவேல் அருகே ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சீத்தாராம் 48. மகன் சரண் 27. நண்பர்கள் போத்தன்னா 45. சிவக்குமார் 42, சீத்தாரம் மனைவி சாவித்திரி 40.

அவரது அண்ணன் மகள் தீபிகா 10. ஆகியோர் காரில் டிச.,16 வத்தலகுண்டு வந்தனர். அங்குள்ள விடுதியில் சாவித்திரி, தீபிகா தங்கினர். மற்றவர்கள் காரில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று காலை வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சீத்தாராம் ஓட்டினார். பெரியகுளம்- திண்டுக்கல் ரோடு காட்ரோடு அருகே காலை 5:10 மணிக்கு கார் மீது, பொள்ளாச்சியில் இருந்து போடி நோக்கி சென்ற லோடு வேன் மோதியது. இதில் சீத்தாராம், போத்தன்னா தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் அப்பாஸ் 40, என்பவரிடம் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us