/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2வது நாளாக மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 200 பேர் கைது
/
2வது நாளாக மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 200 பேர் கைது
2வது நாளாக மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 200 பேர் கைது
2வது நாளாக மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 200 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2025 12:41 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே 2வது நாளாக மறியலில் ஈடுபட்ட 'டிட்டோ ஜாக்' அமைப்பின் ஆசிரியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். டிப்டோ ஜாக் மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் சரவணமுத்து முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பேசினர். டிட்டோஜாக் மாநில துணை பொதுச் செயலாளர் மறியலை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், ராமலட்சுமி தலைமையிலான போலீசார் 200 ஆசிரியர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.