/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சென்ற 2220 சுற்றுலா பயணிகள்
/
இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சென்ற 2220 சுற்றுலா பயணிகள்
இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சென்ற 2220 சுற்றுலா பயணிகள்
இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சென்ற 2220 சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 02, 2025 06:49 AM

மூணாறு : இரவிகுளம் தேசிய பூங்கா இரண்டு மாதம் இடைவெளிக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு, ராஜமலைக்கு முதல் நாளில் 2220 சுற்றுலா பயணிகள் சென்றனர். மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா வரையாடுகளின் பிரசவ காலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று (ஏப்.1) திறக்கப்பட்டது. அதன்படி பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு வரையாடுகளை காண நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். முதல் நாளான நேற்று 2220 பயணிகள் சென்றனர்.
ராஜமலைக்கு செல்லும் பயணிகள் நுழைவு சீட்டு பெற, அதன் நுழைவு பகுதியான 5ம் மையில் முற்றிலும் 'ஆன் லைன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.200, சிறுவர்களுக்கு (5 முதல் 12 வயது வரை) ரூ.150, வெளிநாட்டினருக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

