sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்

/

மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்

மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்

மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்


ADDED : ஏப் 24, 2025 02:43 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:குமுளி மலைப்பாதையில், நேற்று காலை தமிழக அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் தடுப்பு சுவரில் மோதி நின்றதால், 23 பயணியர் தப்பினர்.

கேரள மாநிலம், குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு, நேற்று காலை, 8:30 மணிக்கு தமிழக அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் பாண்டிசுந்தரம் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 23 பயணியர் இருந்தனர்.

குமுளி மலைப்பாதையில் உள்ள 4வது கி.மீ., மாதா கோவில் வளைவுக்கு முன் பஸ் பிரேக் பிடிக்காததால், ராட்சத பைப்புக்கு மேல் அமைக்கப்பட்ட பால கைப்பிடிச்சுவரில் மோதி பஸ் நின்றது.

இதனால், 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பஸ் ரோட்டின் குறுக்கே நின்றதால், தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்குப் பின் பஸ் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.

மற்றொரு அரசு பஸ் குமுளியில் பஸ் ஸ்டாண்டிற்கு திரும்பி வந்தபோது எதிரே சென்ற லாரி மீது மோதியதில், பஸ்சின் முன்பகுதி முழுதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.






      Dinamalar
      Follow us