ADDED : ஆக 12, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
13–தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் மகாகனி, தேக்கு, குமிழ் தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில் ஒரு எக்டேர் வரப்பில் நடவு செய்ய 160 மரக்கன்றுகள் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் 2500 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. தேவையான விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
