sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பைபாஸ் ரோட்டில் ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் காயம்

/

பைபாஸ் ரோட்டில் ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் காயம்

பைபாஸ் ரோட்டில் ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் காயம்

பைபாஸ் ரோட்டில் ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் காயம்


ADDED : மே 29, 2025 03:10 AM

Google News

ADDED : மே 29, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோடு, சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பிரிவில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் காயம் அடைந்தனர்.

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மோகனசுந்தரலிங்கம் 31. இதேஊரைச் சேர்ந்த நாகு 65. மணிகண்டன் 51. ஆகியோர் உடல் பரிசோதனைக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மோகனசுந்தரலிங்கம் ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஜல்லிபட்டி சருத்துப்பட்டி பிரிவு அருகே செல்லும் போது, எதிரே வந்த கார் ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த நாகு, மணிகண்டன் மற்றும் டிரைவர் மோகன சுந்தரலிங்கம் காயமடைந்தனர்.

இவர்கள் ஆம்புலன்சில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய உசிலம்பட்டி அருகே வ.உச்சப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ரகுவிடம் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us