ADDED : ஆக 10, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது க.புதுப்பட்டி அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண்ணிடம் சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த பெண் கம்பம் ஊத்துக்காடு ரோடு பிரிவில் வசிக்கும் ரத்னகுமார் மனைவி சசிகனி 35 என தெரிய வந்தது. உத்தமபாளையம் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.