/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது
/
அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது
அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது
அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது
ADDED : மார் 27, 2025 05:11 AM

--பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டூவீலர், ஆட்டோ ஓட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செல்வநாயகம் 20. இதே ஊர் சஞ்சீவி காலனியைச் சேர்ந்த ஆனந்தக்குமார் 23.
இருவரும் டூவீலரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச்சென்றனர்.
கைலாசபட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 20. தாமரைக்குளம் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 25.
இருவரும் ஆட்டோவை அச்சுறுத்தும் வகையில் ஓட்டினர்.
தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் 4 பேரையும் கைது செய்து, இரு டூவீலர்கள், இரு ஆட்டோக்களை பறிமுதல் செய்தார்.