sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.23 லட்சம் மோசடியில் 4 பேர் கைது

/

ரூ.23 லட்சம் மோசடியில் 4 பேர் கைது

ரூ.23 லட்சம் மோசடியில் 4 பேர் கைது

ரூ.23 லட்சம் மோசடியில் 4 பேர் கைது


ADDED : பிப் 14, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தீபாவளி சீட்டு நடத்தி, 40 பேரிடம், 23.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், மேலக்கூடலுாரை சேர்ந்தவர் தமிழரசி, 64. இவரின் வீட்டருகே சண்முகப்பிரியா, 50, வசிக்கிறார்.

இவர் குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி சிறுசேமிப்பு வார சீட்டு நடத்தினார். அவரிடம், தமிழரசி, அவரது குடும்பத்தினர், 4.85 லட்சம் ரூபாய் செலுத்தினர். மேலும், 39 பேர் இணைந்து, 18.25 லட்சம் ரூபாய் செலுத்தினர்.

மொத்தம், 23.14 லட்சம் ரூபாயை பெற்ற சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோர் இணைந்து சீட்டில் மோசடி செய்தனர்.

தமிழரசி புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஐந்து பேர் மீது வழக்கு பதிந்தனர்.

தீபக்ராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் பெற்ற நிலையில், சண்முகப்பிரியா, மவுனிகா, அஜிதா, கர்ணன் ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us