sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பைபாஸ் ரோடு தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதி 5 பேர் காயம்

/

பைபாஸ் ரோடு தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதி 5 பேர் காயம்

பைபாஸ் ரோடு தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதி 5 பேர் காயம்

பைபாஸ் ரோடு தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதி 5 பேர் காயம்


ADDED : மே 27, 2025 01:31 AM

Google News

ADDED : மே 27, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பிரிவு பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ் ரோட்டோரம் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், தேனூரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி 48. திருச்சி சிறுபத்தூர் தபால் நிலையம் பணியாளர்.

இவர் தனது பள்ளி நண்பர்கள் குடும்பத்துடன் தேக்கடிக்கு ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

பஸ்சினை முசிறி அருகே ஆராய்ச்சியைச் சேர்ந்த யுவராஜ் 30, ஓட்டினார். நேற்று முன்தினம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோடு சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பிரிவு அருகே உயர் கோபுரம் மின் விளக்கு, சோலார் சிக்னல் பழுது காரணமாக அந்தப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் ரோட்டோரம் தடுப்பு தெரியாமல் ஆம்னி பஸ் சுவரில் பஸ் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த கோசிகா 2, தியாகராஜன் 46, பவித்ரா 15, பிரபாகரன் 35, நிவேதா 23 ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தென்கரை போலீசார் டிரைவர் யுவராஜிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us