sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தனியார் சொகுசு பஸ் மோதி இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; டிரைவர் தலைமறைவு

/

தனியார் சொகுசு பஸ் மோதி இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; டிரைவர் தலைமறைவு

தனியார் சொகுசு பஸ் மோதி இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; டிரைவர் தலைமறைவு

தனியார் சொகுசு பஸ் மோதி இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; டிரைவர் தலைமறைவு


ADDED : டிச 30, 2024 07:59 AM

Google News

ADDED : டிச 30, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கம்பத்தில் இருந்து சென்னை சென்ற சொகுசு பஸ் மோதியதில் இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தலைமறைவான டிரைவர் ராம்குமாரை சின்னமனுார், வீரபாண்டி போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை உத்தமபாளையம் இ.பி. காலனி ராம்குமார் 30, ஓட்டினார். பஸ் சீலையம்பட்டி செல்லாயி அம்மன் கோயில் அருகே சென்ற போது, கோட்டூர் ஆலமரத்தெரு சிங்காரவேல் 35, ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சிங்காரவேல், அவரது மகள் ஜனனிப்பிரியா 5, மகன் தஷ்வந்த் 3, காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்றது.

உத்தமபாளையம் கன்னிசேர்வைபட்டி பாண்டித்துரை 31, அவருடன் உறவினர்கள் வினோதினி 31, சந்திரமோகன் 43, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று காரில் வீடு திரும்பினர். கோட்டூர் அருகே சென்ற போது விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ், இவர்கள் கார் மீதும் மோதியது. காரில் இருந்தவர்கள் காயமடைந்தனர். நிற்காமல் சென்ற பஸ் மேலும் பல வாகனங்களில் மோதிய நிலையில், பஸ்சை கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே நிறுத்தி விட்டு டிரைவர் ராம்குமார் தப்பி ஓடினார். இருவேறு இடங்களில் ஒரு பஸ்சினால் ஏற்பட்ட விபத்துகள் பற்றி சின்னமனுார், வீரபாண்டி போலீசார வழக்கு பதிந்து, டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us