UPDATED : ஜூன் 09, 2026 04:29 PM
ADDED : ஜூன் 09, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்டத்தில் 60 ஆயிரம் மாடுகளுக்கு தோல் நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் பாஸ்கரன் கூறினார்.
கோடை காலங்களில் மாடுகளுக்கு பலவகை தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க ஆண்டுக்கு ஒருமுறை ஆகஸ்டில் மாடுகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும். நடப்பு ஆண்டுக்கு வரும் ஆகஸ்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி உள்ளன. மாவட்டத்திற்கு 60 ஆயிரம் தடுப்பூசிகள் வர உள்ளது. கால்நடை டாக்டர், ஒரு ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வீடு வீடாகவும், முகாம்கள் நடத்தியும் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவார்கள். இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி அவசியம். இதுபற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாக டாக்டர் தெரிவித்தார்.
