sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

/

கம்பத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

கம்பத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

கம்பத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது


ADDED : பிப் 01, 2025 05:34 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்த போதும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் ரோட்டில் ஏழரசு களம் அருகே, இரண்டு டூவீலர்களில் நின்றிருந்த நான்கு பேர்களை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 டூவீலரில் வைத்திருந்த பையில் ரூ ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். விசாரணையில் கோகிலாபுரத்தை சேர்ந்த அருண் 19, கார்த்திக் 33, கம்பத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ் 38, விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி 37 , என தெரிந்தது. நால்வரையும் கைது செய்து இரு டூவீலர்களை பறிமுதல் செய்து கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us