/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு
/
அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 16, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்சி வழங்கப்படுகிறது.
ஜனவரி முதல் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. இத்தேர்வு 5 ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் உட்பட 557 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை 7 மாற்றுத் திறனாளிகள் உட்பட 9164 பேர் எழுதியதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.