sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கிளைச்சிறையில் இருந்து தப்பியவர் சிக்கினார்

/

கிளைச்சிறையில் இருந்து தப்பியவர் சிக்கினார்

கிளைச்சிறையில் இருந்து தப்பியவர் சிக்கினார்

கிளைச்சிறையில் இருந்து தப்பியவர் சிக்கினார்


ADDED : அக் 28, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 28, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : பீர்மேடு கிளைச் சிறையில் இருந்து தப்பியவர் சில மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினார்.

இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு அருகே சப்பாத்து புல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சஜன் 30. இவர் மனைவியை துன்புறுத்திய வழக்கில் கைதாகி, பீர்மேடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய சஜன் நேற்று முன்தினம் மாலை கிளைச்சிறையில் இருந்து தப்பி விட்டார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது புகைப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தேடுதல் பணியில் இறங்கினர்.

இதனிடையே ஜெயிலில் இருந்து தப்பிய சஜன் தோட்டாப்புரை பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஆட்டோவில் பழைய பம்பனாறு பகுதிக்குச் சென்றார்.

அவரை அடையாளம் கண்ட ஆட்டோ டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். பீர்மேடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சஜனை பிடித்து கிளை சிறைக்கு கொண்டு சென்றனர்.

அவர் சிறையில் இருந்து தப்பிய சில மணி நேரத்தில் சிக்கியதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us