/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
ADDED : பிப் 15, 2024 06:15 AM
ஆண்டிபட்டி: டி.ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி, இவருக்கும் கொண்டம நாயக்கன்பட்டி ஜெ.ஜெ., நகர் காலனியைச் சேர்ந்த பூபதி 28,க்கும் 2014ல் திருமணம் நடந்தது. பூபதிக்கு சீர்வரிசையாக 5 பவுன் செயின், கணவருக்கு அரை பவுன் மோதிரம் கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின் சென்னையில் வசித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் குழந்தைக்கு மொட்டை எடுக்கவும், காது குத்தி செய்முறை செய்ய வேண்டும் என்றும் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பூபதியை கொடுமைப்படுத்தினராம். பாதிப்படைந்த பூபதி சில மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பூபதியின் பெற்றோர் வீட்டிற்கு வந்த கணவர் குருசாமி , அவரது உறவினர்கள் பூபதியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பூபதி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
புகாரில் கணவர் குருசாமி அவரது உறவினர்கள் குருசாமி, ராமாயி, சுருளிஆண்டவர், முருகேஸ்வரி, பாலமுருகு ஆகியோர் மீது எஸ்.ஐ.,ரதிகலா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

