/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்
/
முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்
முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்
முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்
ADDED : ஏப் 11, 2025 05:10 AM

போடி: போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். 9 ம் நாளான நேற்று சுவாமி முருகனுக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை மாற்றுதல், மாங்கல்ய பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரம்
திருக்கல்யாண விழாவில் அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் போடி உருமிக்காரன் தெருவை சேர்ந்த ஆறுமுகம், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் இடையே ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஆறுமுகம் ரூ. 51 ஆயிரத்தி 500 வரை ஏலம் கேட்டார். பழனியாண்டவர் என்பவர் ரூ. 52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.

