sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடியில் பட்டாசு வெடிக்க தடை விதி மீறினால் ரூ.5000 அபராதம்

/

போடியில் பட்டாசு வெடிக்க தடை விதி மீறினால் ரூ.5000 அபராதம்

போடியில் பட்டாசு வெடிக்க தடை விதி மீறினால் ரூ.5000 அபராதம்

போடியில் பட்டாசு வெடிக்க தடை விதி மீறினால் ரூ.5000 அபராதம்


ADDED : ஜன 17, 2025 05:44 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி நகராட்சி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தும், நிபந்தனைகள் மீறுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

போடி நகராட்சி பகுதியில் திருமணம், காதுகுத்து, வசந்த விழா, துக்க சம்பவம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் பட்டாசு வெடிப்பது வழக்கமாகி வருகிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதால் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டாசு வெடித்தபின் ரோட்டில் சேரும் பேப்பர் கழிவுகளால் ரோடே குப்பையாக மாறுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போடி நகராட்சி பகுதியில் கோர்ட், கோயில், பள்ளி, மருத்துவமனை, குடிசை பகுதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பட்டாசு வெடிக்க முழுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது.

பேப்பர், கலர் காகிதங்கள் அதிக ஒலி, அதிக புகை வெளியிடும் பட்டாசுகளுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபம், வீடுகள் முன்பு பட்டாசு வெடிக்க நகராட்சி முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். நிபந்தனைகள் மீறும் நபர்களுக்கு ரூ.5000 நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். தொழில் நிறுவனங்களாக இருப்பின் அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.

நிகழ்ச்சிகள் நடைபெறுவது மண்டபமாக இருந்தால் மண்டப உரிமையாளரிடமும், வீட்டில் நடைபெறுவதாக இருந்தால் விசேஷம் நடத்துபவரிடம் சேவை கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us