sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உலக அமைதி வேண்டி 'மெகா' திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திரளான சிவனடியார்கள் பங்கேற்பு

/

உலக அமைதி வேண்டி 'மெகா' திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திரளான சிவனடியார்கள் பங்கேற்பு

உலக அமைதி வேண்டி 'மெகா' திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திரளான சிவனடியார்கள் பங்கேற்பு

உலக அமைதி வேண்டி 'மெகா' திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திரளான சிவனடியார்கள் பங்கேற்பு


ADDED : ஜன 01, 2024 06:12 AM

Google News

ADDED : ஜன 01, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: உலக அமைதி வேண்டியும், கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைந்து நடைபெற வேண்டியும் 500 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்ற மெகா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக அமைதி வேண்டியும், கம்பராயப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைந்து நடைபெற வேண்டியும், கம்பம், கம்ப ராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் மெகா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. நெய்வேலி பண்ணிசை சிவனடியார் மகளிர் குழுவினர் 60 பேர்கள், பேராசிரியர் சிவகண முருகப்பன் தலைமை வகித்தார். விஜயலட்சுமி குப்புசாமி முன்னிலை வகித்தார்.

இந்த முற்றோதல் நிகழ்வில் திருவாடுதுறை ஆதினம் சைவ சித்தாந்தம், பன்னிரு திருமுறை பயிற்சி மையங்கள், கம்பம், சின்னமனுார், தேனி சிவனடியார்கள், சின்னமனுார் தெய்வீகப் பேரவை, கம்பம் சிவ மடம், தேனி மாவட்ட சைவ அமைப்புக்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.

காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முற்றோதல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராமனாதன், ராமகிருஷ்ணன், உமாமகேஸ்வரி, திலகவதி, ராஜம், பரசுராமன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us