sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு யானைகள் துரத்தி மயக்கம் அடைந்தவர் மீட்பு

/

காட்டு யானைகள் துரத்தி மயக்கம் அடைந்தவர் மீட்பு

காட்டு யானைகள் துரத்தி மயக்கம் அடைந்தவர் மீட்பு

காட்டு யானைகள் துரத்தி மயக்கம் அடைந்தவர் மீட்பு


ADDED : பிப் 07, 2024 12:41 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் காட்டு யானைகள் விரட்டியதில் கீழே விழுந்து மயக்கமுற்ற மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவரை 13 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.

இடமலைகுடி ஊராட்சியில் அம்பலபடி குடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 37. இவர் நேற்று முன்தினம் மூணாறுக்கு வந்து விட்டு வீடு திரும்பினார். அவர் இரவு 7:15 மணிக்கு வெள்ளவாரகுடி விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு காட்டு யானைகள் எதிர்பாராத வகையில் விஜயகுமாரை துரத்தியது. யானைகளிடம் இருந்து தப்ப முயன்று ஓடியவர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.

அவரை துரத்திய யானைகள் வேறு பாதையில் சென்றதால் உயிர் தப்பினார். நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்த விஜயகுமாருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதால் எழுந்து நடக்க இயலவில்லை. அதனால் இரவு முழுவதும் அடர்ந்த வனத்தினுள் கிடந்தார். அந்த வழியில் நேற்று காலை 8:00 மணிக்கு சென்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் விஜயகுமாரை மீட்டு இடலிபாறை குடிக்கு கொண்டு வந்தனர். அங்கு வாகன வசதி இல்லாததால் மதியம் 2:00 மணிக்கு ஜீப் வரவழைக்கப்பட்டு 4:00 மணிக்கு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு விஜயகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us