sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூணாறு ஊராட்சியில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று ஓட்டெடுப்பு நடக்கிறது

/

மூணாறு ஊராட்சியில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று ஓட்டெடுப்பு நடக்கிறது

மூணாறு ஊராட்சியில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று ஓட்டெடுப்பு நடக்கிறது

மூணாறு ஊராட்சியில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று ஓட்டெடுப்பு நடக்கிறது


ADDED : ஜன 30, 2024 06:56 AM

Google News

ADDED : ஜன 30, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு ஊராட்சியில் இடது சாரி கூட்டணியைச் சேர்ந்த தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு இன்று நடக்கிறது.

மூணாறு ஊராட்சியில் உள்ள 21 வார்டுகளில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி 10 வார்டுகளை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் 11 வார்டுகளில் வெற்றி பெற்று ஊராட்சியை கைப்பற்றியது.

அதன்பிறகு 11, 18 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த காங்., உறுப்பினர்கள் 2022 ஜனவரியில் இடதுசாரி கூட்டணியில் இணைந்ததால் காங்கிரஸ் நிர்வாகம் கவிழ்ந்து.

இடதுசாரி கூட்டணி வசம் ஊராட்சி சென்றது. அதேபோல் இடது சாரி கூட்டணியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் 2023ல் காங்கிரசில் இணைந்ததால் அதன் பலம் மீண்டும் 11 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் காங்கிரஸ்சில் இருந்து விலகி இடதுசாரி கூட்டணியில் இணைந்த 18ம் வார்டு உறுப்பினர் தான் வகித்த தலைவர் பொறுப்பை 2023 ஜூனில் ராஜினாமா செய்ததால் ஜூலை 14ல் தலைவர் தேர்வு நடந்தது.

அதில் காங்கிரசைச் சேர்ந்த உறுப்பினரின் ஒருவரின் ஓட்டு செல்லாததால் குலுக்கல் முறையில் நடந்த தலைவர் தேர்வில் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர் தலைவரானார். அதனால் காங்.,க்கு பெரும்பான்மை இருந்தும் ஊராட்சியை இழந்தது.

இந்நிலையில் ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு காங்., உறுப்பினர்கள் தேவிகுளம் வட்டார வளர்ச்சி துறை அதிகாரி டோமிஜோசப்பிடம் நோட்டீஸ் வழங்கினர். அதன் மீதான விவாதமும், ஓட்டெடுப்பும் இன்று நடக்கிறது.

தகுதி நீக்கம்: காங்கிரஸ்சில் இருந்து விலகி இடதுசாரி கூட்டணியில் இணைந்த 11, 18 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்களை தேர்தல் கமிஷன் சமீபத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்ததால் தற்போது காங்கிரஸ் 11, இடது சாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் பலம் உள்ளதால் காங்கிரஸ் மீண்டும் ஊராட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது.






      Dinamalar
      Follow us