sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பைக்கில் பதுங்கிய பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு

/

பைக்கில் பதுங்கிய பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு

பைக்கில் பதுங்கிய பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு

பைக்கில் பதுங்கிய பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஏப் 05, 2025 02:40 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:பைக்கில் நண்பருடன் பைக்கில் சென்றபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்து வாலிபர் பலியானார்.

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி பழைய ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது இளைய மகன் ஹரிகிருஷ்ணன், 21; எலக்ட்ரீஷியன். இவர், ஏப்., 2ல் நண்பர் ராம்குமாருடன் பைக்கில் சென்றார். ராம்குமார் பைக்கை ஓட்ட, ஹரிகிருஷ்ணன் அமர்ந்து சென்றார்.

அப்போது, பைக்கின் முன்பகுதியில் இருந்து கட்டுவிரியன் பாம்பு வெளியே வந்தது. பாம்பைக் கண்டதும் ராம்குமார், இரு கைகளையும் ஹேண்ட் பாரிலிருந்து எடுத்து உதறினார்.

ஹரிகிருஷ்ணன் பைக்கை பிரேக் பிடித்து நிறுத்த, ஹேண்ட் பாரை பிடித்தபோது, அவரது வலது கையில் பாம்பு கடித்தது. உடனே பைக்கை நிறுத்தி, இருவரும் பாம்பை அடித்துக் கொன்றனர்.

கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்பை துாக்கிச் சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள், ஹரிகிருஷ்ணனை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஹரிகிருஷ்ணன் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us