sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நடவடிக்கை குப்பை இல்லாத காப்புக்காடுகளை உருவாக்க வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு

/

நடவடிக்கை குப்பை இல்லாத காப்புக்காடுகளை உருவாக்க வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு

நடவடிக்கை குப்பை இல்லாத காப்புக்காடுகளை உருவாக்க வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு

நடவடிக்கை குப்பை இல்லாத காப்புக்காடுகளை உருவாக்க வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு


ADDED : பிப் 04, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் வனச்சரக காப்பு காடுகளில் வன விலங்குகளை பாதுகாத்திடவும், அவற்றிற்கு இயற்கையகான உணவு கிடைப்பதை உறுதி செய்திடவும், இப் பகுதியில் பாலிதீன், பிளாஸ்டிக், குப்பை கொட்டுவதை தனிக்குழு அமைத்து வாகனங்களில் கண்காணித்து 'மாஸ் கிளினிங்' செய்ய வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தேனி மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, கம்பம் வனச்சரகப் பகுதிகள் உள்ளன. இதில் காப்புக்காடுகளான தேனி வனச்சரகத்தில் உள்ள வால்கரடு 2.75 எக்டேர், போடி வனச்சரகத்தில் வடக்கு மலை பகுதியில் 9 ஆயிரம் எக்டேர் உள்ளன. இதில் உள்ள உலக்குருட்டி பீட் பகுதி காப்புகாடுகளில் சமீபகாலமாக புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், முயல், காட்டுக்கோழி, உடும்புகள், 5 வகையான பாம்புகள், 12 வகையான பறவைகள், பட்டாம் பூச்சியினங்கள் உள்ளன. சமீபத்தில் புள்ளிமான்கள் அதிகரித்துள்ளது.

தொடர் நடவடிக்கை:

ஒரு சில வனவிலங்குகள் இறந்த போது வனவிலங்குகளுக்கான உடற்கூற் ஆய்வில் இறந்த வன விலங்குகள், கால்நடைகள் பிளாஸ்டிக் குப்பையை சாப்பிடுவதால் உயிரிழந்துள்ளன என கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பிற வனச்சரகங்களை காட்டிலும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை தேனி பைபாஸ் ரோட்டில் அதிகளவு குப்பை கொட்டுகின்றனர். இந்த பாலீதன் குப்பையால் வனவிலங்குகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன. இப் பகுதியில் குப்பை கொட்டவும், தேவையில்லாதவர்கள் வன பகுதியில் செல்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.

தேனி ரேஞ்சர் சிவராம் கூறுகையில், ‛ கலெக்டர், மாவட்ட வன அலுவலர் வழிகாட்டுதல் காப்புகாடுகளில் பிளாஸ்டிக், குப்பை கொட்டப்படுவதை தடுக்க 2 வனவர்கள் தலைமையில் வனக்காப்பாளர்கள் அடங்கிய12 பேர் நியமிக்கப்பட்டு, வாகனங்களில் கண்காணித்து வருகின்றனர். தேனி வால்கரடு, போடி உலக்குருட்டி காப்புக்காட்டு பகுதியில் 13 இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளோம். அலுவலர்களும் கண்காணித்து வருகின்றனர். காப்புகாடுகளில் ‛மாஸ் கிளீனிங்' பணிக்கு தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்களை அழைத்து பணிகள் மேற்கொள்ளவுமச், விழிப்புணர்வும் ஏற்படுத்த உள்ளோம்என்றார்.






      Dinamalar
      Follow us