/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை: நிரந்தர திட்டம் தயாரிக்க கோரிக்கை
/
மேகமலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை: நிரந்தர திட்டம் தயாரிக்க கோரிக்கை
மேகமலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை: நிரந்தர திட்டம் தயாரிக்க கோரிக்கை
மேகமலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை: நிரந்தர திட்டம் தயாரிக்க கோரிக்கை
ADDED : மார் 04, 2024 06:07 AM
சமீபத்தில் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் விவகாரத்தில் வனத்துறைக்கும், தேயிலை எஸ்டேட் நிர்வாகத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து குடிநீர் வினியோகம் சீரானது.
மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மேல் மணலாறு, கீழ் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகமே செய்து தருகிறது. காரணம் குடியிருப்புகள் அனைத்தும் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமானதாகும். குடியிருப்பவர்களும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள். பேரூராட்சியில் பெரிய அளவில் எந்த பணிகளும் செய்வது இல்லை. இந்நிலையில் ஹைவேவிஸ் பகுதியில் கண்ணாடி பங்களா பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து குடிநீர் ஹைவேவிஸ் குடியிருப்புகளுக்கு நீண்ட காலமாக வினியோகம் ஆகிறது. சமீபத்தில் குடிநீர் பகிர்மான குழாயை யானை மிதித்து சேதப்படுத்தியது.
இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. சேதமடைந்த பகிர்மான குழாயை சீரமைக்க தொழிலாளர்கள் சென்ற போது வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. எஸ்டேட் நிர்வாகம் கடிதம் கொடுக்க வனத்துறை வலியுறுத்தியது. எஸ்டேட் நிர்வாகமோ கடந்த 80 ஆண்டுகளாக உள்ள குடிநீர் திட்டம்.
இப்போது கடிதம் எதற்காக தர வேண்டும் என, தெரிவித்தது. இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. - போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக குடிநீர் பகிர்மான குழாய் சீரமைக்க அனுமதித்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யலாம் அல்லது தென் பழநியில் இருந்து ஹைவேவிஸ் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
ஹைவேவிஸ் பேரூராட்சி நிர்வாகம் மலைக் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு என சிறப்பு திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என அம்மலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

