sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

/

பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்


ADDED : நவ 06, 2024 05:25 AM

Google News

ADDED : நவ 06, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : தொடர் மழையால் பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பெரியகுளம் நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியில் இருந்து வாய்க்கால் வழியாக சோத்துப்பாறை அணைக்கு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் குழாய் தொட்டிக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. தினமும் 58 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது பேரிஜம் ஏரி, சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் தொடர்மழையால் மழைநீர் கலங்கலாக வருகிறது.

இதனால் பெரியகுளத்தில் இரு நாட்களாக கலங்கலான குடிநீர் சப்ளையாகிறது.

சில பகுதிகளில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் குடிக்க முடியவில்லை. இதனால் சிலர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில்: சில தினங்களாக பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது.

அணையின் மேற்பகுதி கரையோரம் மண் சரிவினால் கலங்கலாக வரும் குடிநீரை, சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது மூன்று முறை குளோரினேசன் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் கலங்கலாகவே வருகிறது.

எனவே குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us