ADDED : மே 03, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகம் உள்ளது.
ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவை வழங்கினர். மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதி கணேசன், ஒன்றிய அவைத் தலைவர் மதிஅரசன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.