ADDED : மார் 19, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் வி.நி.,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 50 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இப் பள்ளியில் 1973 -1974ல் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக சந்திக்கும் சங்கம விழா பள்ளிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள் புலவர்கள் ராஜரத்தினம், சின்னப்பன், வெங்கட்ராமன், கணேசன், பெருமாள், சுப்ரமணியன், தலைமை ஆசிரியர் கோபிநாத்தை முன்னாள் மாணவர்கள் விஜயகுமார், பாலசுந்தரம், மாரிமுத்து தலைமையில் மாணவர்கள் கூட்டமைப்பினர் கவுரவித்தனர். தங்களுக்குள் மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகத்தில் நட முடிவு செய்தனர். முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

