sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணிக்கவாசகர் கோயிலில் நாளை ஆனித் திருமஞ்சனம் விழா துவக்கம் ஜூன் 30 குருபூஜை, சுவாமி வீதி உலா

/

மாணிக்கவாசகர் கோயிலில் நாளை ஆனித் திருமஞ்சனம் விழா துவக்கம் ஜூன் 30 குருபூஜை, சுவாமி வீதி உலா

மாணிக்கவாசகர் கோயிலில் நாளை ஆனித் திருமஞ்சனம் விழா துவக்கம் ஜூன் 30 குருபூஜை, சுவாமி வீதி உலா

மாணிக்கவாசகர் கோயிலில் நாளை ஆனித் திருமஞ்சனம் விழா துவக்கம் ஜூன் 30 குருபூஜை, சுவாமி வீதி உலா


ADDED : ஜூன் 21, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார்: சின்னமனுாரில் மாணிக்கவாசகர் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன துவக்க விழா நாளை( ஜூன் 22 ) துவங்குகிறது.

தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனுாரில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் நாளை ( ஜூன் 22 ) முதல் துவங்குகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு சிவனடியார்கள் பங்கு பெறும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வீதி உலா வருவார். மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான், பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை, அன்று சுவாமிகள் வீதி உலா வரும் ஜூன் 30ல் நடைபெறும். ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஜுலை 2 ல் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறும். விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் திருவாசகம் அண்ணாமலை மற்றும் சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us