ADDED : நவ 07, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி யூகோ வங்கி சார்பில் அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில்
ஊழல் எதிர்ப்பு, ஊழல் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப்போட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் பரந்தாமன் தலைமை வகித்தார். போட்டியில் 9ம் வகுப்பு மாணவர் தினேஷ்குமார், மாணவி மோனிகள், 8 ம் வகுப்பு மாணவி அனோஷ்கா முதல் 3 இடங்களை வென்றனர். வங்கி மேலாளர் கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். துணை மேலாளர் மகாலட்சுமி, வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், வினோத்குமார் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.