/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சமணர் சிற்பம் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை முடிவு
/
சமணர் சிற்பம் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை முடிவு
சமணர் சிற்பம் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை முடிவு
சமணர் சிற்பம் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை முடிவு
ADDED : ஜன 20, 2024 05:32 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் சமணர் சிற்பங்கள் அமைந்துள்ள பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள் கிடைக்கும் என்பதால் இப்பகுதியில் அகழ்வராய்ச்சி நடத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புத்தமதத்தை பரப்ப வந்த சமணர்கள் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் செய்துள்ளனர். மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை, உத்தமபாளையத்திலும் சமணர் சிற்பங்கள் உள்ளன. இரண்டு இடங்களிலுமே மலைக்குன்றுகளில் தான் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இப்பகுதியில் தங்கி புத்த மதத்தை பரப்பி உள்ளனர்.
பொதுவாக குன்றுகளில் குகைகள் அமைத்து, அதில் தங்குவதும், குன்றுகளை குடைந்து அதில் இருந்து வெளியேறும் சுத்தமான சுனை நீரை அருந்துவதும் வழக்கம்.
இப்பகுதியை தொல்லியல் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது.
ஆனால் சமூக விரோதிகள் சிற்பங்களை சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இருப்பதால், சமணர் சிற்பங்கள் அமைந்துள்ள மலைக் குன்றை சுற்றி வேலி அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தினால், வரலாற்று சிறப்புமிக்க சமணர்களின் பொருள்கள், புத்தர் சிலைகள், வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் வகையில் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.
எனவே, சமணர் சிற்பங்கள் அமைந்துள்ள பகுதி, அருகில் உள்ள பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.