/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு
/
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு
ADDED : ஜன 21, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு தொடர்பான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கருத்தாளர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்ததந்த வட்டாரங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

