sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் பெண்கள் பஜனை பாடி வழிபாடு

/

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் பெண்கள் பஜனை பாடி வழிபாடு

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் பெண்கள் பஜனை பாடி வழிபாடு

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் பெண்கள் பஜனை பாடி வழிபாடு


ADDED : ஜன 14, 2025 05:57 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

சிவபெருமான் திருவதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். அந்த நாளில் தான் நிஜ ரூபத்தில் காண முடியும். மற்ற நாட்களில் லிங்க வடிவில் தான் காட்சியளிப்பார்.

ஆண்டு முழுவதும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு நடைபெறும்.

மற்ற நாட்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் இருக்காது . நேற்று காளாத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் வெள்ளி கவசத்திலும், உற்ஸவர் மலர் அலங்காரத்திலும் காட்சி தந்தார் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்றனர்.

பெரியகுளம்: கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு

சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி, கட்டளைதாரர்கள் தியாகராஜன், கல்பனா செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயில், பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

போடி: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வதித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். அதிகாலையில் சுவாமி நகர் வலத்துடன் திருப்புகழ் சபை பெண்கள் பஜனை பாடினர். ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கர ஆவடையம்மாள் கழுவன் செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர். திருவாதிரை கழிப்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரின் தரிசனம் பெற்றனர். பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ராட்சம் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us