/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
/
நாளை சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
ADDED : ஜூன் 10, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டத்தில் நாளை சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்கிறது. இக் குழுத்தலைவர் நந்தகுமார் எம்.எல்.ஏ.,( தி.மு.க.,) தலைமையில் குழுவினர் நாளை (ஜூன் 11) மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வில் வீட்டு வசதி வாரி குடியிருப்புகள், நுகர்பொருள் வாணிபகழக கோடவுன்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழில் முன்னேற்ற நிறுவனம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து மதியம் 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.