ADDED : ஜன 30, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளத்தில் சிட்டி யூனியன் வங்கி உள்ளது. இதன் ஏ.டி.எம்., மையம் தென்கரை வடக்கு அக்ரஹாரம் தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஏ.டி.எம்., மெஷினை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
இதனை சி.சி.டி.வி., கேமரா வழியாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் கண்காணித் துள்ளனர்.
பெரியகுளம் வங்கி மேலாளர் சேக்முகமது புகாரில், எஸ்.ஐ., இதிரிஸ்கான், சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தார். ஆயுதங்களை கொண்டு வந்து ஏ.டி.எம்., மெஷின் உடைக்க முயற்சியா? ஒரு நபரா அல்லது வேறு யாரும் உடனிருந்தனரா என விசாரித்து வருகிறார்.

