sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடையூறு செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்கு

/

இடையூறு செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்கு

இடையூறு செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்கு

இடையூறு செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்கு


ADDED : செப் 10, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : குமுளி மலைப்பாதையில் தட்டிக் கேட்டவரை தாக்கிய 4 பேரை லோயர்கேம்ப் போலீசார் கைது செய்தனர்.

கூடலுார் எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த மலைச்சாமி 51, தனது மனைவியுடன் டூவீலரில் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் திரும்ப வரும்போது, குமுளி மலைப்பாதை மாதா கோயில் அருகேபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இவர் தட்டிக் கேட்டதால் காரில் இருந்த குமுளி ரோசாப்பூ கண்டத்தைச் சேர்ந்த கார்த்திக் 23, விக்னேஷ் 23, விஷ்ணு 29, சச்சின் 24, ஆகிய 4 பேர் இவரை தாக்கினர்.

காயமடைந்த மலைச்சாமி லோயர்கேம்ப் ஸ்டேஷனில் புகார் செய்ததைத் தொடர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us