sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது

/

 துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது

 துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது

 துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது


ADDED : டிச 27, 2025 04:27 AM

Google News

ADDED : டிச 27, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தேனி மாவட்டம் போடி அருகே கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற பொன்னுச்சாமி 62, சிவக்குமார் 29, ஆகியோரை நாட்டு துப்பாக்கி, தோட்டாவுடன் வனத்துறையினர் கைது செய்தனர்.

போடி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி, சூலப்புரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்.

இருவரும் நேற்று போடி அருகே கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றனர். அப்பகுதியில் போடி ரேஞ்சர் நாகராஜ், வனவர்கள் அன்பரசன், நாகராஜ், பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேட்டையாட முயன்ற பொன்னுச்சாமி, சிவக்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் வன விலங்குகளை வேட்டையாட அவர்கள் முயன்றது தெரிந்தது.

வனத்துறையி னர் அவர்களை கைது செய்து ஒரு நாட்டுதுப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, மண்வெட்டி, ஹெட்லைட், அலைபேசிகள், டூவீலர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us