ADDED : பிப் 21, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் 22. பெரியகுளத்திலிருந்து தேனிக்கு ஆட்டோவில் சென்றார்.
இதே ஊர் கே.ஆர்.பி., நாயுடு தெருவைச் சேர்ந்த நந்தகுமார் 32. ஆட்டோவை ஓட்டினார். டி.கள்ளிப்பட்டி வளைவில் வேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் அருண்குமார் காயமடைந்தார். தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் ஆட்டோ டிரைவர் நந்தகுமாரை கைது செய்தனர்.-