ADDED : பிப் 19, 2026 07:25 AM

தேனி: தேனி வனத்துறை சார்பில் 'வனமும் வளமும்' என்ற திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வனபாதுகாப்பு, வனவிலங்குகள் கணக்கெடுப்பு முறை, தீ தடுப்பு மேலாண்மை, வன விலங்குகள் மனித மோதல்களை தவிர்த்தல் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.
இதற்காக 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மூலம் தலா 20 மாணவர்களுக்கு இப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமை வகித்தார். நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., நாகேந்திரன், உதவி வன பாதுகாவலர் செசில்கில்பர்ட், பயிற்சி வன அதிகாரி புவனேஷ், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்டிபட்டி ரேஞ்சர் அருள் விழாவை ஒருங்கிணைத்தார்.

