sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு

/

அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு


ADDED : அக் 19, 2025 09:46 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு நடுவில் கூடலுார் நகராட்சி அமைந்திருந்தாலும் கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கத்தான் செய்கிறது. கனமழை நேரங்களில் ரோட்டின் ஓரங்களில் மண் அரிப்பு அதிகம் ஏற்படும் நிலையும் உள்ளது.

காரணம் மரங்கள் குறைவு. மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக கூடலுாரில், 'சோலைக்குள் கூடல்' அமைப்பினர் 426 வது வாரமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

நகரின் முக்கிய வீதிகள், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, கால்வாய், கண்மாயின் கரைப்பகுதி, பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். மேலும் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் இறங்கியுள்ளது அரசு ஊழிர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

விவசாயம் அவசியம் கோபி கண்ணன், உறுப்பினர், சோலைக்குள் கூடல் : அரசு, அரசின் உதவி பெறும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள்ஆகிய இடங்களில் கூடுதல் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இன்றைய தலைமுறையினரிடத்தில் விவசாயம் குறித்த அடிப்படை விஷயங்கள் கூட தெரியவில்லை. விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டுமே மனிதன் உயிர் வாழ முடியும் என்ற ஒரு விஷயத்தை மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் பயன்படுத்தும் தண்ணீர் வீணாக வெளியேற்றாமல் காய்கறி தோட்டத்திற்கு செல்லும் வகையில் அமைக்க வேண்டும். விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்களின் கவனம் திசை திரும்பாமல் ஒருமனதாக இருக்கும். இது கல்விக்கும் பெரிதும் உதவும்., என்றார்.

பாலிதீன் ஒழிப்பு அவசியம் புதுராஜா, தலைவர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம்: மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் ஒருபுறம் இருந்த போதிலும் மறுபுறம் மண்வளத்தை பாதிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயராமல் தடுக்கவும் காரணமாக உள்ள பாலிதீன் பொருட்கள் பயன்பாடு நகராட்சி பகுதியில் அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. தற்போது அனைத்து டீ கடைகளிலும் பாலிதீன் கவர்களில் சூடாக டீ, காபி பார்சல் கொடுக்கின்றனர்.

மேலும் தெருவோரக் கடைகளில் வடைகளை செய்தித்தாள்கள் கொடுத்து விற்பனை செய்கின்றனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். மரங்கள் வளர்த்து பாலிதீன் பைகளை தடை செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தால் மாசில்லா கூடலுாரை உருவாக்கலாம்., என்றார்.






      Dinamalar
      Follow us